Published : 30 Apr 2016 03:03 PM
Last Updated : 30 Apr 2016 03:03 PM

தேமுதிகவுக்கு துரோகம் இழைத்தவர்களை மக்கள் மன்னிக்கமாட்டார்கள்: பிரேமலதா

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கும், அவரது கட்சித் தொண்டர்களுக்கும் துரோகம் இழைத்தவர்களை மக்கள் மன்னிக்கமாட்டார்கள் என்று தேமுதிக மகளிரணி தலைவர் பிரேமலதா கூறியுள்ளார்.

தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி - தமாகா கூட்டணி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் பொன்.சேர்மன், ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் முருகன் உள்ளிட்டோரை ஆதரித்து வெள்ளிக்கிழமை இரவு பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

''விஜயகாந்தின் கரத்தைப் பிடித்து வளர்ந்த சந்திரகுமார், அவருக்கு துரோகம் செய்துவிட்டார். ஈரோடு மக்கள் துரோகிகளுக்கு துணைபோக மாட்டார்கள். துரோகிகளுக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

துரோகிகளுக்கு தேர்தலில் இடமில்லை என்று சொல்லக்கூடிய அளவுக்கு மக்கள் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமாகாவுக்கு தேர்தல் முடிவில் மாபெரும் வெற்றியை மக்கள் வழங்குவார்கள். இதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை'' என்று பிரேமலதா பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x