Published : 24 Feb 2017 10:07 AM
Last Updated : 24 Feb 2017 10:07 AM

தி இந்து, ஆஸ்பயர் லேர்னிங் இணைந்து நீட், ஜேஇஇ மாதிரி நுழைவுத்தேர்வு

சென்னையில் கடந்த 15 ஆண்டுகளாக நுழைவுத் தேர்வுகளுக்கு சிறப்பாக பயிற்சி அளித்துவருகிறது 'ஆஸ்பயர் லேர்னிங்' நிறுவனம்.

பிளஸ் 2 மாநிலக் கல்வித் திட்டத்தில் படித்த மாணவர்களும் 'நீட்', 'ஜேஇஇ' போன்ற நுழைவுத் தேர்வுகளை எளிதாக எதிர்கொள்ள முடியும் என்பதைக் காட்டும் வகையில், 'தி இந்து' தமிழ் நாளிதழும், ஆஸ்பயர் லேர்னிங் நிறுவனமும், சென்னை சாஸ்தா கல்வி நிறுவனமும் இணைந்து, 'நீட்', 'ஜேஇஇ' தேர்வுகளுக்கான மாநில அளவிலான மாதிரி நுழைவுத் தேர்வை கடந்த 12, 19 தேதிகளில் தமிழகம் முழுவதும் 33 இடங்களில் நடத்தின.

ஏராளமான மாணவ, மாணவிகள் இதில் பங்கேற்றனர். இத்தேர்வில் பங்கேற்ற அனைவரும் இது பயனுள்ள அனுபவமாக இருந்தது என்றும் நல்லதொரு முயற்சி என்றும் பாராட்டினர்.

மாணவர்கள் இத்தேர்வுகளை சுலபமாக எழுதவேண்டும் என்ற நோக்குடன் பல பள்ளிகள் தங்கள் வளாகத்தில் இத்தேர்வை நடத்தின. இந்த வாய்ப்பை தவறவிட்ட சில பள்ளிகள் இத்தேர்வுகளை தங்கள் பள்ளிகளிலும் நடத்தித்தருமாறு கேட்டுக்கொண்டதால், வரும் நாட் களில் இப்பள்ளிகளில் மீண்டும் இத்தேர்வு நடத்தப்பட உள்ளது.

இத்தேர்வை நேரில் எழுத இய லாதவர்கள், ஆன்லைனில் www.aspirelearning.com இணையதளம் மூலமாக இத்தேர்வை தங்கள் வசதிக்கேற்ப எழுதலாம். இதன் மூலம், வினாத்தாள் வடிவமைப்பு, அதன் கடினத்தன்மை போன்றவை குறித்து அறியலாம்.

இந்த மாதிரி நுழைவுத்தேர்வை தங்களது பள்ளி வளாகத்தில் நடத்த விரும்பும் ஆசிரியர்கள், முதல்வர் கள், தாளாளர்கள் 8754472060 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள லாம். மேலும் விவரங்களுக்கு 9840632977, 7338851114 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ள லாம். www.aspirelearning.com இணைய தளத்திலும் தெரிந்து கொள்ளலாம்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x