Published : 25 Mar 2016 07:02 PM
Last Updated : 25 Mar 2016 07:02 PM

திமுக கூட்டணியில் மமகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு

திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் மே 16-ல் நடைபெறவிருக்கிறது. பலமுனைப் போட்டி காணும் இத்தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனிதநேய மக்கள் கட்சி, திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடுகிறது. கூட்டணி ஏற்கெனவே முடிவாகிவிட்ட நிலையில், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இன்று தொடங்கியது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு, மனிதநேய மக்கள் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.

இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 5 தொகுதிகளில் போட்டியிடுவதென தீர்மானிக்கப்பட்டது. எந்தெந்த தொகுதிகள் என்பது மற்ற தோழமைக் கட்சிகளோடு பேசி முடிவெடுக்கப்பட்ட பின்னர் அறிவிக்கப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x