Published : 16 May 2016 08:04 AM
Last Updated : 16 May 2016 08:04 AM
தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத் தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கியது. தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதி தவிர 232 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்று வருகிறது.
சென்னை கோபாலபுரத்தில் உள்ள சாரதா பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திமுக தலைவர் கருணாநிதி வாக்களித்தார்.
வாக்குப்பதிவுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, தேர்தலில் திமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்றார்.
எத்தனைத் தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் என்ற கேள்விக்கு, "தேவையான அளவுக்கு வெற்றி பெறும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT