Published : 11 Feb 2017 03:07 PM
Last Updated : 11 Feb 2017 03:07 PM

திமுக ஆட்சி விரைவில் மலரும்: ஸ்டாலின் நம்பிக்கை

"நமது ஆட்சி விரைவில் மலரும் காலம் வரும். அப்போது அனைத்து மக்களையும் பாதுகாக்கும் நல்லாட்சியை வழங்குவோம்'' என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

'தமிழகத்தில் யார் முதல்வராவது என்ற போட்டியில் அரசு நிர்வாகம் குட்டிச்சுவராகிக் கிடக்கிறது. ஹாசினி என்கிற பிஞ்சின் கொடூரக் கொலை பற்றி முதல்வரும் கண்டு கொள்ளவில்லை. போலீஸ் கமிஷனரும் எட்டிப் பார்க்கவில்லை' என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், சிறுமி ஹாசினி குடும்பத்துக்கு நீதியையும், இழப்பீட்டையும் வழங்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். | இது தொடர்பான அறிக்கையை விரிவாக வாசிக்க > >அதிகாரப் போட்டிக்கிடையே மறக்கப்பட்ட சிறுமி ஹாசினியின் கொடூரக் கொலை: ஸ்டாலின் வேதனை

தற்போது தமிழக அரசியல் சூழலில் பரபரப்பு நிலவும் சூழலில், அந்த அறிக்கையில் ஸ்டாலின் குறிப்பிட்ட சில கருத்துகள் கவனத்தை ஈர்த்துள்ளது.

"தலைவர் கருணாநிதியின் அன்பு உடன்பிறப்புகளே.. நம்மைப் பொறுத்தவரை, ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் நலனில் அக்கறையுடன் செயல்படுகிற இயக்கம் தான் திமுக. எளிய மக்கள் பக்கம் கவனத்தைத் திருப்புவோம். ஆள்பவர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வைப்போம்.

நமது ஆட்சி விரைவில் மலரும் காலம் வரும். அப்போது அனைத்து மக்களையும் பாதுகாக்கும் நல்லாட்சியை வழங்குவோம்'' என்று அந்த அறிக்கையில் ஸ்டாலின் கூறியுள்ளது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x