Published : 17 May 2016 11:20 AM
Last Updated : 17 May 2016 11:20 AM
பிளஸ் 2 தேர்வின் முடிவுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.31 மணிக்கு வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் 91.4%.
கடந்த இரண்டு ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. கடந்த 2014, 2015 ஆண்டுகளில் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி விகிதம் 90.6% ஆக இருந்தது. இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 91.4% ஆக அதிகரித்துள்ளது.
மாணவிகளே அதிகம்..
வழக்கம்போல் மாணவிகளே மாணவர்களைவிட அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் தேர்ச்சி விகிதம்: 94.4%. மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 87.9%. இந்த ஆண்டு மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.
முக்கிய புள்ளி விவரம்:
பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 4-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ம் தேதி முடிந்தது. தமிழகத்தில் பள்ளிகள் மூலமாக 8 லட்சத்து 33 ஆயிரத்து 682 (8,33,682) பேர் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இவர்களில் மாணவர்கள் 3,88,935, மாணவிகள் 4,44,747. இவர்களில் பொதுக் கல்வி பிரிவில் பயின்றவர்கள் 3,50,012 மாணவர்கள், 4,20,460 மாணவிகள் ஆவர். தொழிற்கல்வி பிரிவில் பயின்றவர்கள் 38,923 மாணவர்கள், 24,287 மாணவிகள் ஆவர்.
பாடவாரியாக முழு மதிப்பெண் பெற்றவர்கள் எத்தனை பேர்:
இயற்பியல் - 5
வேதியியல் - 1,703
உயிரியல் - 775
தாவரவியல் - 20
விலங்கியல் - 10
கணிதம் - 3361
கணினி அறிவியல் - 303
வணிகவியல் - 3084
கணக்குப்பதிவியல் - 4341
பிசினஸ் கணிதம் - 1072
வேதியியல் பாடம் மிகக் கடினமாக இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், அப்பாடத்தில் 1,703 பேர் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT