Published : 02 Jul 2014 11:28 AM
Last Updated : 02 Jul 2014 11:28 AM

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 மறுதேர்வு கோரி ஆர்ப்பாட்டம்: கடலூரில் நடந்தது

ஜூன் 29-ம் தேதி நடந்த டிஎன் பிஎஸ்சி குரூப் 2 தேர்வு குறித்த வினாத்தாள் முன்கூட்டியே வெளி யாகியிருப்பதாக செய்திகள் வந்துள்ளதால், மறுதேர்வு நடத்த வேண்டும் என தேர்வு எழுதியவர்கள் கடலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரே செவ்வாய்க்கிழமை ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜூன் 29-ம் தேதி நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வை சுமார் 5 லட்சம் பேர் எழுதினர். கடலூர் மாவட்டத்தில் 19 ஆயிரம் பேர் எழுதினர். இந்நிலையில் கட லூர் திருவந்திபுரத்தில் தேர்வு எழுதிய ஒருவர் திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையம் அருகே கீழே கிடந்த துண்டுச் சீட்டை எடுத்து பார்த்தபோது, அதில் குரூப் 2 தேர்வு பொதுத் தமிழ் பாடப்பிரிவு வினாக் களுக்குரிய விடைகள் இருந் தன. அதைப்பார்த்து அவர் அதிர்ச்சி யடைந்தார். தேர்வு முடிந்த சிறிது நேரத்தில் விடைகள் எழுதப்பட்ட துண்டுச் சீட்டு சிக்கியது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கடலூரில் குரூப் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் 100 பேர் செவ்வாய்க்கிழமை காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் மாவட்ட வரு வாய் அதிகாரி மனோகரிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில், ஜூன் 29-ம் தேதி நடந்த குரூப்-2 தேர்வு வினாத்தாள் வெளியானதாக பரபரப்பாக பேசப்படுகிறது. இத னால் நாங்கள் மிகுந்த மன உளைச் சலுக்கு ஆளாகி உள்ளோம்.

2012-ம் ஆண்டு இதேபோன்று குரூப்-2 தேர்வு வினாக்களுக்குரிய விடைத்தாள் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதேபோன்று இந்த தேர்வையும் ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x