Published : 11 May 2015 03:57 PM
Last Updated : 11 May 2015 03:57 PM
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டுள்ளதையடுத்து நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்.பி.க்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று காலை மக்களவையில் நிலச் சட்டம் மீதான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது அப்போது அவைக்குள் சிரித்த முகத்துடன் நுழைந்த அதிமுக எம்.பி,க்கள் வெற்றி சமிக்ஞை காட்டினார். அதிமுகவினர் எம்.பி.க்கள் சிலர் 'அம்மாவுக்கு வெற்றி' என்று கோஷமிட்டனர்.
அப்போது அவையில் பேசிக் கொண்டிருந்த திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சுகதா ராய், "அதிமுகவினருக்கு இது ஒரு நற்செய்தி. வாழ்த்துகள்" என்றார். அவையில் ஒருசில நிமிடங்கள் மட்டுமே அமர்ந்திருந்துவிட்டு அதிமுகவினர் வெளியேறினர்.
மாநிலங்களவையில், மத்திய அமைச்சர் கட்கரி பதவி விலக்கோரி அமளி நடந்துகொண்டிருந்த நேரத்தில் அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் எழுந்து வெற்றி சமிக்ஞை காட்டினார். பின்னர் மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, நிர்மலா சீதாராமன் ஆகியோரை அவையில் சந்தித்த நவநீதகிருஷ்ணன் அவர்களுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT