Published : 17 Jul 2015 08:56 AM
Last Updated : 17 Jul 2015 08:56 AM

சென்னை - திருநெல்வேலி இடையே விரைவில் சுவிதா சிறப்பு ரயில்கள் இயக்கம்

சென்னை மற்றும் திருநெல்வேலி இடையே கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் அடுத்த மாதம் சுவிதா சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை எழும்பூரில் இருந்து ஆகஸ்ட் 14-ம் தேதி இரவு 9 மணிக்கு புறப்படும் சுவிதா சிறப்பு ரயில் (00603) மறுநாள் காலை 10.45 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும். இதேபோல் நெல்லையில் இருந்து ஆகஸ்ட் 16, 23 மற்றும் 30-ம் தேதிகளில் மதியம் 2.45 மணிக்கு புறப்படும் சுவிதா சிறப்பு ரயில் (00604) மறுநாள் அதிகாலை 4.20 மணிக்கு எழும்பூரை வந்தடையும்.

சென்ட்ரல்-எர்ணாகுளம்

சென்னை சென்ட்ரலில் இருந்து ஆகஸ்ட் 14-ம் தேதி இரவு 10.30 மணிக்கு புறப்படும் சுவிதா சிறப்பு ரயில் (00605) மறுநாள் காலை 11.15 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடையும். இதே சிறப்பு ரயில் (00606) மறுமார்க்கமாக ஆகஸ்ட் 16, 23 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரவு 7 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 8.15-க்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். மேற்கண்ட சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (17-ம் தேதி) தொடங்குகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x