Published : 24 Oct 2013 12:40 PM
Last Updated : 24 Oct 2013 12:40 PM

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஆர்.கே.அகர்வால் பதவியேற்பு

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஆர்.கே.அகர்வால் பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் ஆளுநர் ரோசய்யா அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

1953- ஆம் ஆண்டு பிறந்த ராஜேஸ்குமார் அகர்வால்,கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் சென்னை உயர் நீதிமன்றம் தலைமை (பொறுப்பு) நீதிபதியாக பதவி வகித்து வந்தார். இன்று அவர் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x