Last Updated : 18 Sep, 2016 06:49 PM

 

Published : 18 Sep 2016 06:49 PM
Last Updated : 18 Sep 2016 06:49 PM

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் சிறையில் தற்கொலை

மின் கம்பியை கடித்து இறந்ததாக சிறைத்துறை விளக்கம்

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார், புழல் சிறையில் தற்கொலை செய்துகொண்டார். அவர், மின்கம்பியை கடித்து தற்கொலை செய்துகொண்டதாக சிறைத்துறை அறிவித்துள்ளது.

கடந்த ஜூன் 24-ம் தேதி காலை சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஐ.டி. பெண் பொறியாளர் சுவாதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே மீனாட்சிபுரத்தில் உள்ள தனது வீட்டில் இருந்த ராம்குமார் (24) என்ற இளைஞரை கடந்த ஜூலை 1-ம் தேதி நள்ளிரவில் சுற்றிவளைத்து கைது செய்தனர். போலீஸார் பிடிக்க முயன்றபோது, ராம்குமார் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற தாக கூறப்பட்டது. இதையடுத்து, அவரை நெல்லை அரசு மருத்துவமனையில் போலீஸார் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.

பின்னர் அவரை ஜூலை 3-ம் தேதி காலை சென்னைக்கு அழைத்துவந்து, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல்நிலை தேறியதைத் தொடர்ந்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது கழுத்தில் போடப்பட்டிருந்த 18 தையல்கள் சிறை மருத்துவமனையிலேயே பிரிக்கப்பட்டன. ராம்குமாரிடம் காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்தப்பட்டு அவரது காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.

போலீஸார் அவரை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அவரது ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு சுவாதி கொலை நடந்த இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டது. புழல் சிறையில் அடையாள அணிவகுப்பும் நடத்தப்பட்டது. இந்த வழக்கை நுங்கம்பாக்கம் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வந்தனர். இன்னும் 3 நாட்களில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் முடிவு செய்திருந்தனர்.

இந்நிலையில், நேற்று மாலை சிறைச்சாலையின் சமையல் அறை பகுதிக்கு சென்ற ராம்குமார், அங்கிருந்த மின்சார பெட்டியில் இருந்த வயரை இழுத்து அதை வாயில் வைத்து பற்களால் கடித்துள்ளார். இதில் அவரது உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்தது. முகம் மற்றும் மார்பு பகுதிகள் கருகின. உடனடியாக அங்கிருந்த போலீஸார் அவரை மீட்டு, சிறைச்சாலை மருத்துவமனையில் சேர்த்தனர். ராம்குமார் தற்கொலைக்கு முயன்றதாக சிறை நிர்வாகம் சார்பில் புழல் காவல் நிலையத்தில் புகாரும் கொடுக்கப்பட்டது.

பின்னர், மேல்சிகிச்சைக்காக ராம்குமாரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வந்தனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனையிலேயே வைக் கப்பட்டுள்ளது.

ராம்குமார் இறந்த தகவல் அறிந்ததும் அவரது வழக்கறி ஞர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் ராயப்பேட்டை மருத்துவமனை யில் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அசம் பாவிதங்களைத் தவிர்க்க ஏராளமான போலீஸார் குவிக்கப் பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x