Published : 19 Oct 2015 10:23 AM
Last Updated : 19 Oct 2015 10:23 AM

கொலீஜியம் முறையில் திருத்தம்: கி.வீரமணி கோரிக்கை

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நேற்று வெளியிட்ட அறிக்கை: நீதி பதிகள் நியமனத்துக்காக மத்திய அரசு கொண்டு வந்த தேசிய நீதிபதி கள் நியமன கமிஷன் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தேசிய நீதிபதிகள் நியமன கமிஷனின் மூலம் நீதிபதிகளை நியமிக்கும்போது, அரசியல் தலை யீடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறிய உச்ச நீதிமன்றம், கொலீ ஜியம் முறையே சரியானது என்று கூறியுள்ளது. இது வரவேற்கத் தக்கது. நீதிமன்றங்களுக்கு வெளி மாநிலத்தவர்கள் தலைமை நீதிபதி களாக வரும்போது, அந்த மாநில வழக்கறிஞர்கள், மாவட்ட நீதிபதி கள் குறித்த அறிமுகம் அவர்களுக்கு இருக்குமா என்பது தெரியவில்லை.

மேலும், வெளிப்படைத்தன்மையும் இல்லாத சூழல் உள்ளது. இந்த 2 பிரச்சினைகளை தீர்த்துவிட்டால் கொலீஜியம் முறை சிறப்பானதாக இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x