Published : 21 Mar 2015 11:10 AM
Last Updated : 21 Mar 2015 11:10 AM

கிருஷ்ணகிரியில் தலித் சிறுவன் மீது வன்கொடுமை: 6 பேர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தலித் சிறுவனை வன்கொடுமை செய்த வழக்கில் கல்லாவி கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரன், ரகுபதி, தங்கராஜ் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 2ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் கருவானூர் கிராமத்தில் திருவிழாவில் நடந்தது. அப்போது கோயிலுக்குச் சென்ற அரவிந்தன் என்ற குறவர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை ஒரு கும்பல் அடித்துத் துன்புறுத்தியது.

அடிதாங்க முடியாமல் குடிக்கத் தண்ணீர் கேட்ட இளைஞரின் வாயில் சிறுநீர் கழித்து அரவிந்தன் எனும் சிறுவனுக்கு வன்கொடுமை செய்தனர்.

வன்கொடுமை செய்தவர்களில் தேவேந்திரன், ரகுபதி, தங்கராஜ் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த 6 பேரில் 3 பேர் பிளஸ் டூ படிக்கும் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x