Published : 31 Dec 2014 09:35 AM
Last Updated : 31 Dec 2014 09:35 AM

காஞ்சிபுரம் வைகுண்டபெருமாள் கோயில்: பரமபத வாசல் நாளை அதிகாலை 5 மணிக்கு திறப்பு

வைகுண்ட பெருமாள் கோயிலில் உள்ள பரமபத வாசல் நாளை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட உள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, காஞ்சிபுரத்தில் உள்ள வைகுண்ட பெருமாள் கோயிலில் பரமபத வாசலும், அஷ்டபுஜ பெருமாள் கோயிலில் சொர்க்க வாசலும் திறக் கப்படும்.

இதுகுறித்து, கோயிலின் செயல் அலுவலர் முத்துராஜா கூறியதாவது: வைகுண்ட பெருமாள் கோயிலில் 3 நிலைகளில் வைகுண்ட வாசனாக பெருமாள் அருள்பாலிக்கிறார். ஏகாதசியை முன்னிட்டு கோயிலில் உள்ள பரமபத வாசல் நாளை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட உள்ளது. தொடர்ந்து காலை 6 மணிக்கு கருடசேவை உற்சவம் நடைபெறும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x