Published : 16 Jun 2016 08:33 AM
Last Updated : 16 Jun 2016 08:33 AM

கள்ளுக்கான தடையை நீக்க நடைபயணம்

கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, ஆகஸ்ட் 9-ம் தேதி தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபயணம் மேற்கொள்ளப்படும் என்று, அக்கூட்டமைப்பின் செயலாளர் செ.நல்லசாமி தெரிவித்துள்ளார்.

கரூரில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியது: கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும். விவசாய ஆணையப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். இலவசங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆகஸ்ட் 9-ம் தேதி கன்னியாகுமரியில் வாகன மற்றும் நடைபயணம் தொடங்குகிறோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x