Last Updated : 25 Apr, 2016 08:02 AM

 

Published : 25 Apr 2016 08:02 AM
Last Updated : 25 Apr 2016 08:02 AM

கணவரின் தேர்தல் வெற்றிக்காக மனைவி திண்ணை பிரச்சாரம்

ஆவடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் க.பாண்டியராஜ னின் தேர்தல் வெற்றிக்காக அவரது மனைவி திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டு வருவது வாக்காளர்களின் கவனத்தை ஈர்த் துள்ளது.

ஆவடி தொகுதியில் அதிமுக சார்பில் க.பாண்டியராஜன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவரது மனைவி லதா ராஜன் தனது கணவரின் தேர்தல் வெற்றிக்காக திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

தனது பிரச்சார உத்திகள் குறித்து அவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது: நானும், எனது கணவரும் சேர்ந்து ‘மாஃபா’ என்ற மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தை நடத்தி வருகிறோம். எனது கணவர் ஆவடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். அவருக்கு உதவும் வகையில் நானும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளேன். குறிப்பாக, சுயஉதவிக் குழுக்கள் உள்ளிட்ட பெண்களை நேரில் சந்தித்து அவர்களிடம் திண்ணை பிரச்சாரம் செய்து ஆதரவு திரட்டி வருகிறேன்.

பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வருவதால் ஆவடி ஒரு ‘காஸ்மோபாலிடன்’ தொகுதியாக உள்ளது. எனவே அவர்களை கவரும் வகையில் பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமும் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளேன் என்று அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x