Published : 07 Feb 2017 11:50 PM
Last Updated : 07 Feb 2017 11:50 PM
ராஜினாமா செய்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அதிரடிப் பேட்டியை அடுத்து, சசிகலா போயஸ்கார்டனில் அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழக முதல்வர் பதவியிலிருந்து தன்னை ராஜினாமா செய்யக் கட்டாயப்படுத்தினர் என்று ஓ.பன்னீர்செல்வம், மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் சுமார் 40 நிமிடங்கள் தியானம் செய்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து அதிரடி தகவல்களை வெளியிட்டார். விரிவாக வாசிக்க: >கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தார்கள்: ஜெ. நினைவிடத்தில் தியானத்துக்கு பின் ஓபிஎஸ் அதிரடி பேட்டி
ஓபிஎஸ் அதிரடி பேட்டியில் பல்வேறு குற்றச்சாட்டுகள் அடுக்கியதை அடுத்து போயஸ் கார்டனில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தமிழக அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தக் கூட்டத்தில் முன்னணி அமைச்சர்களும், அதிமுக எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டுள்ளனர்.
இதில் பன்னீர்செல்வத்தின் பேட்டியை அடுத்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து பரபரப்புடன் விவாதிக்கப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT