Published : 18 Apr 2017 07:15 PM
Last Updated : 18 Apr 2017 07:15 PM
ஓ.பன்னீர்செல்வத்தை நிபந்தனைகளுடன் சேர்க்கும் அவசியம் எங்களுக்கு இல்லை என்று அதிமுக அம்மா கட்சியின் எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.
இன்று சென்னை அடையாறில் உள்ள தினகரன் இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தங்க தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ பங்கேற்றார். அதற்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''அமைச்சர்கள் ஆலோசனை நடத்தியது எங்களுக்குத் தெரியாது.
அதிமுக அம்மா அணியில் எந்த சலனமும் இல்லை. 122 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு எங்களுக்கு உள்ளது.
தினகரனின் ஆதரவால் உயர்ந்தவர் ஓ.பன்னீர்செல்வம். குடும்ப அரசியல் பற்றிப் பேச ஓ.பன்னீர்செல்வத்துக்கு தகுதியில்லை. ஓபிஎஸ் அணியினர் இணைந்தால் ஏற்றுக்கொள்வதாக தினகரன் கூறியுள்ளார். ஓபிஎஸ் அணி இணைந்தால் மீண்டும் இரட்டை இலை கிடைக்கும். ஆனால், ஓ.பன்னீர்செல்வத்தை நிபந்தனைகளுடன் சேர்க்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.
பொதுச் செயலாளர் சசிகலாவையும், துணை பொதுச் செயலாளர் தினகரனையும் தொண்டர்கள் ஏற்றுக்கொண்டனர்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT