Published : 11 Feb 2017 10:48 AM
Last Updated : 11 Feb 2017 10:48 AM
நாமக்கல் எம்.பி. பி.ஆர். சுந்தரம், கிருஷ்ணகிரி எம்.பி. அசோக்குமார் ஆகிய இருவர், ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இது, சசிகலா அணிக்கு மேலும் பின்னடைவாக கருதப்படுகிறது.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள பொறுப்பு முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்துக்கு அதிமுக எம்.பி.க்கள் நாமக்கல் பி.ஆர். சுந்தரமும், கிருஷ்ணகிரி அசோக்குமாரும் சென்றனர். அங்கு ஓபிஎஸ்ஸை சனிக்கிழமை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதிமுக எம்.பி. மைத்ரேயன், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, அவைத் தலைவர் மதுசூதனன், தமிழக சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகர் பி.ஹெச். பாண்டியன், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜமாணிக்கம், ஆறுக்குட்டி, மனோரஞ்சிதம், மனோகரன், எஸ்.பி.சண்முகநாதன் ஆகியோர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஏற்கெனவே ஆதரவு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் நாமக்கல் எம்.பி. பி.ஆர். சுந்தரம், கிருஷ்ணகிரி எம்.பி அசோக்குமார் ஆகிய இருவர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென போர்க்கொடி தூக்கினார். இதனால், அக்கட்சியில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் நடந்து வருகின்றன.
ஓபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சி நிர்வாகிகள், முன்னாள் எம்.பி., எம்எல்ஏக்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருவது கவனிக்கத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT