Published : 14 Jun 2016 10:55 AM
Last Updated : 14 Jun 2016 10:55 AM
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் குழந்தைகளுக்கான உணவு பொருட்கள் வழங்கும் வகையில் விற்பனை மையம் நேற்று திறக்கப்பட்டது.
இது தொடர்பாக எழும்பூர் ரயில் நிலைய மேலாளர் ஜி.பிரபாகர் கூறுகையில், ‘‘ ரயில் நிலையங்களில் பச்சிளம் குழந்தைகளுக்கான உணவுக வகைகள் விற்பனை திட்டமான ‘ஜனனி சேவா’ திட்டத்தை ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு சமீபத்தில் டெல்லியில் தொடங்கிவைத்தார்.
இதையடுதது, முதல் கட்டமாக சென்னை, டெல்லி, மும்பை, ஹவுரா, நாகபுரி, புணே, சூரத், லக்னோ, மொராதாபாத் உள்ளிட்ட 25 ரயில் நிலையங்களில் குழந்தைகளுக்கான உணவுப் பொருள் கிடைக்க வசதி செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி, எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைமேடை 4-ல் குழந்தைகளுக்கான உணவு பொருட்கள் வழங்கும் மையம் தற்போது திறக்கப்பட்டுள்ளது. பால், பால்பவுடர், பால் பாட்டில் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படும்.’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT