Published : 15 Feb 2017 07:18 PM
Last Updated : 15 Feb 2017 07:18 PM
கூவத்தூர் விடுதியில் உள்ள எம்எல்ஏக்களின் உரிமையைப் பாதுகாக்க பேரவை தலைவரிடம் வலியுறுத்த உள்ளோம் என்று ராதாபுரம் எம்எல்ஏ இன்பதுரை கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் கூவத்தூரில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''எடப்பாடி பழனிச்சாமிக்கு சட்டச் சிக்கலை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக மதுரை தெற்கு எம்.எல்.ஏ. சரவணன் கூவத்தூர் காவல் நிலையத்தில் ஆட்கடத்தல் புகார் கொடுத்து வழக்குப் பதிவு செய்துள்ளார்.
இங்குள்ள விடுதியில் போலீஸாரை மிட்டி எம்எல்ஏக்களை தொந்தரவு செய்து வருகின்றனர். எனவே, எம்எல்ஏக்களின் உரிமையை பாதுகாக்க பேரவை தலைவரிடம் வலியுறுத்த உள்ளோம்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT