Published : 17 Feb 2017 03:11 PM
Last Updated : 17 Feb 2017 03:11 PM

எடப்பாடி பழனிசாமி முதல்வரானதை எதிர்த்து சேலத்தில் ஒபிஎஸ் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்

எடப்பாடி பழனிசாமி முதல்வரானதை கண்டித்து சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகம் முன்பு, ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக முதல்வராக அதிமுகவின் எடப்பாடி பழனிசாமியை பதவி ஏற்குமாறு தமிழக ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதனைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் வியாழக்கிழமை நடத்த பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்றார். எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து பிற 30 அமைச்சர்களும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள ஆளுநர் அவர்களுக்கு ரகசியக் காப்புப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவி ஏற்றதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று (வெள்ளிக்கிழமை) ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

முன்னதாக மக்கள் விருப்பத்துக்கு ஏற்ப அதிமுக எம்எல்ஏக்கள் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று கோரி தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பேரணி நடைபெறும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x