Published : 15 Feb 2017 08:40 PM
Last Updated : 15 Feb 2017 08:40 PM
எங்கள் கருத்தை ஆவன செய்வதாக ஆளுநர் கூறியுள்ளார். நாளைக்குள் நல்ல முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கிறோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
ஆளுநரை எடப்பாடி பழனிச்சாமி உட்பட அதிமுகவின் 10 அமைச்சர்கள் இன்று ஆளுநர் மாளிகையில் சந்தித்தனர்.
அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ''ஆளுநர் ஜனநாயகத்தைக் காப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. 124 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் வழ்னக்கியுள்ளோம். எங்கள் கருத்தை ஆவன செய்வதாக ஆளுநர் கூறியுள்ளார். நாளைக்குள் நல்ல முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கிறோம்.
ஓ.பன்னீர்செல்வத்துக்கு 8 எம்.எல்.ஏக்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளார். எங்கள் அணியில் 124 எம்.ஏல்.ஏக்கள் உள்ளனர்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT