Published : 28 Mar 2015 10:44 AM
Last Updated : 28 Mar 2015 10:44 AM
ஊடகத்துறை மாணவர்களுக்கான குறும்படப் போட்டியை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் நடத்துகிறது.
இதுகுறித்து உலகத் தமிழா ராய்ச்சி நிறுவன இயக்குநர் டாக்டர் கோ.விஜயராகவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை தரமணியில் செயல் பட்டு வரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வளாகத்தில் பழந்தமிழரின் சிறப்புகளை பலரும் அறியும் வண்ணம் வாழ்வியல் காட்சிக்கூடம் அமைக்கப்பட வுள்ளது.
இக்காட்சிக் கூடத்தைக் காணவரும் பார்வையாளர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் குறும்படங்களைத் தயாரிக்க ஊடகவியல், காட்சி ஊடகவியல் மாணவர்களுக்கு குறும்படப் போட்டி நடத்தப்படவுள்ளது.
குறும்படப் போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் முதலில் அதற்கான ஸ்கிரிப்ட்டை அனுப்ப வேண்டும்.
அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்கிரிப்ட்டை குறும்படங்களாகப் படமெடுத்து, குறுந்தகட்டில் அனுப்பவேண்டும். சிறந்த குறும்படங்களுக்கு முதல் பரிசாக ரூ.5 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.3 லட்சம், மூன்றாம் பரிசாக ரூ.2 லட்சமும் வழங்கப்பட வுள்ளது.
ஏப்ரல் 15-ம் தேதிக்குள் குறும்படத்துக்கான ஸ்கிரிப்ட்டை அனுப்ப வேண்டும். இதுபற்றி மேலும் தகவல்களைப் பெற 9789016815 செல்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT