Published : 27 Mar 2016 11:03 AM
Last Updated : 27 Mar 2016 11:03 AM
ஆந்திரம், ஜெய்ப்பூரில் உள்ளது போல தமிழகத்திலும் பழங்கால ஓவி யங்கள் மற்றும் கலைப்பொக் கிஷங்களை பாதுகாக்கும் கலா-கிராமங்களை தோற்றுவிக்க வேண்டும் என்று ஓவியர் ஸ்ரீனிவாசன் நடராஜன் பேசினார்.
‘தி இந்து’ யங் வேர்ல்டு சார்பில் பள்ளி மாணவ, மாணவியருக்கான ஓவியப்போட்டி சென்னை அண்ணாநகரில் உள்ள எஸ்பிஓஏ பள்ளியில் நேற்று நடந்தது. ‘தைரோகேர்’ நிறுவனம் ‘தி இந்து’வுடன் இணைந்து போட்டிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தது. சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 2100 மாணவ, மாணவியர் இந்த ஓவியப்போட்டியில் பங்கேற்றனர்.
இதில் ஜூனியர் பிரிவில் மாண்ட்போர்ட் பள்ளி மாணவர் வி.விஜய் முதல் பரிசை வென்றார். இவர் காது கேளாத சிறப்பு மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. சீனியர்களுக்கான பிரிவில் சென்னை டாக்டர் விமலா கான்வென்ட் மெட்ரிக் பள்ளி மாணவர் பி.ஆண்ட்ரோ ஜோஸ்வா முதல் பரிசை வென்றார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ‘தி சென்னை சில்க்ஸ்’ மற்றும் ‘சில்ரன்ஸ் ப்ளேஸ்’ நிறுவனங்கள் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.
பிற்பகலில் நடந்த பரிசளிப்பு விழாவுக்கு ‘தி இந்து’ பள்ளிகளுக்கான உயர்மட்டத் தலைவர் டி.ராஜ்குமார் தலைமை வகித்தார். வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு ஓவியர் ஸ்ரீனிவாசன் நடராஜன் பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “கலை என்பது ஒவ்வொரு மாணவருக்கும் மிகவும் முக்கியம். அதில் சிறந்து விளங்க ஊக்கம்தான் மிகப்பெரிய உற்சாக டானிக். அந்த தன்னம்பிக்கையை ‘தி இந்து’ உங்களுக்காக இங்கு விதைத்துள்ளது.
ஆந்திரம், ஜெய்ப்பூரில் உள்ளது போல தமிழகத்திலும் பழங்கால ஓவியங்கள் மற்றும் கலைப்பொக்கிஷங்களை பாது காக்கும் கலா-கிராமங்களை தோற்றுவித்தால், நம்முடைய கலை இன்னும் வளரும். அது கல்விச்சுற்றுலா செல்லும் இளைய தலைமுறைக்கு மேலும் ஊக்கமளிக்கும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT