Published : 19 Feb 2017 09:00 AM
Last Updated : 19 Feb 2017 09:00 AM
பேரவையில் அரசின் பெரும் பான்மை நிரூபிக்கப்பட்டது தொடர்பான அறிக்கையை ஆளுநருக்கு பேரவைச் செயலர் ஜமாலுதீன் அனுப்பி வைத்தார்.
அதிமுக எம்எல்ஏக்களால் சட்டப்பேரவை கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி கடந்த 14-ம் தேதி தேர்வு செய்யப்பட்டார். அவர் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். எடப்பாடி பழனி சாமியை, கடந்த 16-ம் தேதி ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். அன்று மாலையே முதல்வ ராக எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர்கள் 30 பேரும் பதவியேற்றனர். எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கும் போதே, 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் ஆளுநர் அறிவுறுத்தி இருந்தார்.
இதையடுத்து, நேற்று சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் மூலம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி யின் அமைச்சரவை பெரும்பான் மையை நிரூபிக்கும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அமளியால் இருமுறை அவை ஒத்திவைக்கப்பட்டு இறுதியில், திமுக உறுப் பினர்கள் வெளியேற்றப்பட்டனர். எண்ணிக் கணிக்கும் முறையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்படி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த அரசு மீதான நம்பிக்கை தீர்மானத்துக்கு 122 வாக்குகள் கிடைத்தன. எதிர்ப்பாக 11 வாக்குகள் பதி வாகின. இதையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, வாக்கெடுப்பு முடிவுகள் தொடர்பான அறிக் கையை தமிழக ஆளுநருக்கு பேரவைச் செயலாளர் ஜமாலுதீன் அனுப்பி வைத்ததாக பேரவை செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT