Published : 17 Feb 2017 09:18 PM
Last Updated : 17 Feb 2017 09:18 PM
அரசின் நம்பிக்கை கோரும் தீர்மானத்துக்கு எதிராக அனைத்து எம்எல்ஏக்களும் வாக்களிக்குமாறு ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று ஓபிஎஸ் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லதில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:
''தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடைபெறக் கூடாது என்பதற்காக உடல்நிலையைக் கூட பாராமல் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். குடும்ப ஆட்சியை எதிர்த்து வெற்றி பெற்றவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. மக்கள் வாக்களித்தது ஜெயலலிதாவுக்குத்தான்.
ஜெயலலிதாவின் கொள்கைகளை கட்டிக் காத்திட வேண்டும். தமிழகத்தில் குடும்ப ஆட்சி அமைய அதிமுக எம்எல்ஏக்கள் உறுதுணையாக இருக்கலாமா? நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கும் முன்பு ஒருமுறை ஜெயலலிதாவை நினைத்து எம்எல்ஏக்கள் முடிவெடுக்க வேண்டும்.
எம்எல்ஏக்கள் எந்த ஆசை வார்த்தைக்கும் மயங்க மாட்டார்கள் என்று நம்புகிறேன். அரசின் நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கு எதிராக அனைத்து எம்எல்ஏக்களும் வாக்களிக்க வேண்டும்'' என்று ஓபிஎஸ் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT