Published : 11 Feb 2017 08:19 AM
Last Updated : 11 Feb 2017 08:19 AM

அமைச்சர் செல்லூர் ராஜூவை காணவில்லை என புகார்

மதுரையை சேர்ந்தவர் செந்தில் முருகன். இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனு: எனது சொந்த ஊர் மதுரை மாவட்டம், கொடி மங்கலம், மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி. எங்கள் கிராமத்தில் அடிப்படை வசதி சரியாக நிறைவேற்றப்படாமல் உள்ளது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு மர்ம காய்ச்சல் பரவிக் கொண்டிருக்கிறது. இதனால், மக்கள் பெரும் துயரத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

இதற்காக எங்கள் தொகுதி எம்எல்ஏ செல்லூர் ராஜூவை (கூட்டுறவுத்துறை அமைச்சர்) நேரில் சந்தித்து மனு கொடுக்க அரசு சட்டமன்ற விடுதிக்கு சென்றபோது அவரை அங்கு காணவில்லை. அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளர் சசிகலா எங்கள் தொகுதி எம்எல்ஏவை சட்டத்துக்கு விரோதமாக அடைத்து வைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே, செல்லூர் ராஜூவை உடனடியாக காவல் ஆணையர் மீட்டுத் தரவேண்டும். வரும் 13-ம் தேதி காலை 8 மணிக்குள் மீட்டுத் தரவில்லை என்றால் காவல்துறையை கண்டித்து காலவரையற்ற தர்ணா போராட்டம் நடத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x