Published : 11 Feb 2017 08:43 AM
Last Updated : 11 Feb 2017 08:43 AM

அனல்பறக்கும் அதிமுக அரசியல்! - பேஸ்புக்கில் தனி பக்கம் வாட்ஸ்-அப் குரூப்கள் தொடக்கம்

பேஸ்புக், வாட்ஸ்-அப் போன்ற சமூக வலை தளங்களில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு திரட்டும் பணியில் தகவல் தொழில்நுட்பப் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவிக்க, ராஜா அண்ணாமலைபுரத்தில் அவரது இல்லத்துக்கு அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் வந்து கொண்டிருக்கின்றனர். தொழில் நுட்பத் துறையைச் சேர்ந்தவர்கள், வருபவர்களிடம் எந்த மாவட்டம், எந்த தொகுதி, கட்சியில் பொறுப்பு உண்டா இல்லையா உள்ளிட்ட விவரங்களைக் கேட்டு பதிவு செய்துகொள்கின்றனர். அவர்க ளின் செல்போன் எண்ணை வாங்கி வாட்ஸ்-அப் குரூப்களில் இணைத்து ஓ.பன்னீர்செல்வத் துக்கு ஆதரவு திரட்டப்படுகிறது.

அதேபோல் பேஸ்புக்கிலும் தனியாக பக்கம் தொடக்கப் பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவிப்ப வர்களின் வீடியோக்கள் அந்த பக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு ஆதரவு திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஓபிஎஸ் இல்ல வளாகத்தில் 3 இடங்களில் வைக்கப்பட்டுள்ள எல்இடி டிவியிலும், வாயில் முன்பு வைத்துள்ள ஒரு திரையிலும் ஆதரவு தெரிவிப்பவர்களின் காட்சி கள் ஒளிபரப்பப்படுகிறது.

வருபவர்களுக்கு உணவு, தண்ணீர் வசதி செய்யப்பட்டுள் ளது. அவர்கள் நிழலில் அமர் வதற்கு 2 இடங்களில் பந்தலும் போடப்பட்டுள்ளது. ஓ.பன்னீர் செல்வம் இல்லம் இருக்கும் பகுதியில் ஓபிஎஸ் தலைமையில் நல்லாட்சித் தொடர வேண்டும் என்று சுவரொட்டிகள் அதிக அளவில் ஒட்டப்பட்டுள்ளன. தீபா பேரவையைச் சேர்ந்தவர்களும் ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், தீபா ஆகியோரின் படங்களுடன் கூடிய சுவரொட்டிகளை ஒட்டி யுள்ளனர்.

ஆதரவாளர்கள் உற்சாகம்

உச்ச நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு வரும் செவ்வாய்க்கிழமை வெளியாகிறது என்ற தகவலை கேட்டு, ஓபிஎஸ் இல்லத்தில் கூடியிருந்த ஆதர வாளர்கள் உற்சாகம் அடைந்தனர். எம்ஜிஆர் பாடல்களை இசைக்கச் செய்து ஆட்டம் பாட்டத்தில் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x