Published : 25 Jun 2016 09:08 AM
Last Updated : 25 Jun 2016 09:08 AM
அதிகாரிகள் பற்றாக்குறை காரண மாக, அமெரிக்காவுக்கு செல்வதற் கான விசா வழங்குவதில் கால தாமதம் ஏற்படுவதால் பயணத்தை முன்பே திட்டமிடும்படி டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் தலைமை விசா அதிகாரி ஜோசப் எம்.பாம்பர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் நேற்று நிருபர்களிடம் அவர் கூறிய தாவது:
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை அமெரிக்காவுக்கு பயண மாகும் இந்தியர்களின் எண் ணிக்கை 40 ஆயிரமாக இருந்தது. ஆனால், கடந்த ஆண்டு அமெரிக்கா செல்வதற் காக விசாவுக்கு விண் ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது. இந்த விண்ணப்பங்களில் மூன்றில் இரண்டு பங்கு விசாக்கள் பி1 வர்த்தக விசா, பி2 சுற்றுலா விசா வகையைச் சேர்ந்தவையாகும்.
கடந்த 5 ஆண்டுகளில் அமெ ரிக்க விசாவுக்கான தேவை இந்தியா வில் 80 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால், அதற்கேற்ப எங்கள் தூதரகங்களில் அமெரிக்க அதிகாரிகள், அலுவலர்கள் நியமிக் கப்படவில்லை. எனவே, கூடுதல் அமெரிக்க அதிகாரிகள் இந்தியா வந்து பணிபுரிவது தொடர்பான அனுமதி குறித்து இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். பேச்சுவார்த்தையின் பலனாக அமெரிக்காவில் புதிதாக ஒரு தூதரகத்தை இந்திய அரசு அமைக்க உள்ளது. அதேபோல இந்தியாவிலும் புதிய அமெரிக்க தூதரகம் ஒன்று ஏற்படுத்தப்பட உள்ளது. இதுதவிர, ஹைதராபாத்தில் புதிய துணைத் தூதரகம் ஒன்றை கட்டி வருகிறோம். இது, 2018-ம் ஆண்டு முதல் பயன்பாட்டுக்கு வரும்.
கடந்த காலங்களில் விசா வுக்கு விண்ணப்பிப்பவர்கள் நேர்முகத்தேர்வுக்கு 2 வாரங்களுக்குள் அழைக்கப்பட்டு வந்தனர். ஆனால், அதிகாரிகள் பற்றாக்குறை காரணமாக இது தாமதமாகிறது. தற்போது விசா வுக்கு விண்ணப்பித்த தேதி யிலிருந்து 4 வார காலத்துக்குள் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படு கிறார்கள்.
எனவே, விசாவுக்கு விண்ணப் பிப்போர் முன்னரே தங்கள் பயணத்தை திட்டமிட்டு விண் ணப்பிக்குமாறு கேட்டுக்கொள் கிறோம். நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுபவர்களுக்கு ஒரு மணி நேரத்துக்குள் அனைத்து நடைமுறைகளும் முடிக்கப்படும். பின்னர், தகுதியான நபர்களுக்கு ஒரு வார காலத்துக்குள் விசா வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT