Published : 07 Oct 2014 11:22 AM
Last Updated : 07 Oct 2014 11:22 AM
திருவள்ளூர் மாவட்டத்தில், தமிழ் வளர்ச்சித் துறை நடத்தும் கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டியில் பங்கேற்க கல்லூரி மற்றும் மேல்நிலை வகுப்பு மாணவ - மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டிகள் வரும் அக்.8, 10 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன.
இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
பள்ளி மற்றும் கல்லூரி மாணவ - மாணவியரிடையே படைப் பாற்றல் மற்றும் பேச்சாற்றலை வளர்க்கும் நோக்கத்தில் 11, 12 -ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவ - மாணவியர்கள், கல்லூரி மாணவ - மாணவியர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டி களை தமிழ் வளர்ச்சித் துறை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
இதன்படி, திருவள்ளூர் மாவட் டத்தில் வரும் 8-ம் தேதி கல்லூரி மாணவ - மாணவியர்கள் பங்குபெறும் போட்டிகள் திரு நின்றவூர் ஜெயா கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.
இதே போல் மேல்நிலைப் பள்ளி மாணவ - மாணவியர்களுக்கான போட்டிகள் வரும் அக்.10-ம் தேதி திருவள்ளூர் ஆர்.எம்.ஜெயின் அரசினர் மகளிர் மேல்நிலைப்
பள்ளியில் நடக்கிறது. கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் ஒவ்வொரு கல்லூரி மற்றும் பள்ளிகளில் இருந்தும் தலா ஒருவர் என 3 பேர் பங்கேற்கலாம்.
போட்டிகளில் பங்கேற்கும் மாணவ - மாணவியர், தங் கள் கல்லூரி முதல்வர் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரிய ரிடம் இருந்து, ஆளறிச் சான்று பெற்று வரவேண்டும். வெற்றி பெறு பவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ. 7 ஆயிரம் வழங்கப்படும். இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் இடம் பெற்றுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT