Published : 19 Jun 2017 08:23 AM
Last Updated : 19 Jun 2017 08:23 AM

மண்டபம் மீனவர்கள் 5 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படு வதும், கைது செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது. 61 நாட் கள் மீன்பிடி தடை காலத்துக்கு பிறகு கடந்த 14-ம் தேதி இரவு மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.

இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்தால் கைது செய்யப்படுவர் என இலங்கை மீன்வளத் துறை அமைச் சர் மகிந்த அமரவீர மற்றும் கடற்படையினர் கடந்த 16-ம் தேதி எச்சரிக்கை விடுத்தனர். அவர்களது எச்சரிக்கையை தொடர்ந்து ராமேசுவரம், பாம்பன், மண்டபம், புதுக்கோட்டை மாவட் டம் கோட்டைபட்டினம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் பாக் ஜலசந்தி பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்வதை தவிர்த்து, மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடிக்கச் சென்றனர்.

இந் நிலையில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் ஆகிய பகுதி களில் இருந்து 1500-க்கும் மேற் பட்ட விசைப்படகுகள் நேற்று முன் தினம் அதிகாலை மீன்பிடிக்கச் சென்றன. இதில் சிலர் வழக்கம் போல் இந்திய கடல் எல்லையைக் கடந்து மீன்பிடித்தனர். அதில் ஒரு படகில் 5 மீனவர்கள் நள்ளிரவில் நெடுந்தீவு கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்துக் கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக அப்படகை சிறை பிடித்தனர். அதில் இருந்த 5 மீனவர்களையும் கைது செய்து காரை நகர் துறைமுகத்துக்கு அழைத்துச் சென்றனர்.

தங்கச்சிமடம் விக்டோரியா நகரைச் சேர்ந்த அருமைநாதன் என்பவருக்குச் சொந்தமான அந்தப் படகு மண்டபம் கடல் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்றுள்ளது. அதில் இருந்த அருமைநாதனின் மகன் ரஞ்சன், முத்துக்குமார், நவநீதன், எவி, பாலன் ஆகிய 5 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் இலங்கை கடற் படையினர் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x