Published : 16 Jun 2016 08:26 AM
Last Updated : 16 Jun 2016 08:26 AM
மன்னார் வளைகுடா கடற் பகுதியில் தமிழக மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படையினர், வலைகளையும் அறுத்து எறிந்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் தெற்கு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த செவ்வாய்க்கிழமை 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் புதன்கிழமை அதிகாலை தனுஷ் கோடி அருகே மன்னார் வளை குடா கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர்.
அப்போது, சிறிய கப்பல்களில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், மண்டபம் மீனவர்களிடம், ‘இது இலங்கை கடற்பகுதி. இங்கு மீன்பிடிக்கக் கூடாது’ என்று எச்சரிக்கை விடுத்து, விரட்டியுள்ளனர். மேலும் 2 விசைப்படகுகளில் இருந்த மீனவர்களின் வலைகளை அறுத்து கடலுக்குள் வீசியுள் ளனர். இதனால், அச்சமடைந்த மீனவர்கள் கரைக்குத் திரும்பினர்.
இதுவரை பாக். ஜலசந்தி கடற்பகுதியில் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி வந்த இலங் கை கடற்படையினர், மன்னார் வளைகுடா கடற்பகுதியிலும் மீன வர்களை அச்சுறுத்திய சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT