Published : 30 Jul 2014 07:26 PM
Last Updated : 30 Jul 2014 07:26 PM
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் மகளிர் ஸ்குவாஷ் இரட்டையர் பிரிவில் உலகின் நம்பர் 1 மலேசிய ஜோடியான நிகோல் டேவிட், லோ வீ வெர்ன் ஆகியோரை இந்தியாவின் தீபிகா பல்லிக்கல்-ஜோஷனா சின்னப்பா ஜோடி வீழ்த்தியது.
தீபிகா பல்லிக்கல், ஜோஷனா சின்னப்பா இருவருமே தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனைகள் என்பது கவனிக்கத்தக்கது.
பிரிவு டி போட்டியான இதில் நம்பர் 1 மலேசிய ஜோடியை இந்திய ஜோடி 11-8, 11-5 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றது.
இதே ஜோடியை மலேசியாவில் நடைபெற்ற மூன்று நாடுகளுக்கு இடையிலான போட்டியிலும் தீபிகா ஜோடி வென்றது அதிர்ஷ்டமில்லை என்பது இப்போது நிரூபணமாகியுள்ளது.
இன்று தங்களது கடைசி லீக் போட்டியில் நியூசிலாந்து ஜோடியை எதிர்கொள்கின்றனர் தீபிகா-ஜோஷனா சின்னப்பா ஜோடி.
மகளிர் ஒற்றையர் பிரிவில் தீபிகா ஏற்கனவே காலிறுதிக்குத் தகுதி பெற, ஆடவர் பிரிவில் சவ்ரவ் கோஷல் முதல் முறையாக அரையிறுதிக்குத் தகுதி பெற்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT