Published : 01 Sep 2014 11:31 AM
Last Updated : 01 Sep 2014 11:31 AM
தெற்கு ரயில்வே விளையாட்டு சங்கத்தின் (எஸ்ஆர்எஸ்ஏ) சார்பில் 80-வது அகில இந்திய ரயில்வே தடகளப் போட்டி சென்னை ஜவாஹர்லால் நேரு மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
இந்தப் போட்டியில் இந்தியா முழுவதிலும் இருந்து 600 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.இந்தப் போட்டியின் தொடக்க விழா இன்று மதியம் 2 மணிக்கு நடைபெறுகிறது. தெற்கு ரயில்வே கூடுதல் பொதுமேலாளர் எஸ்.விஜயகுமரன் போட்டியைத் தொடங்கி வைக்கிறார். செப்டம்பர் 3-ம் தேதி பிற்பகல் 3.15 மணிக்கு நடைபெறும் நிறைவு விழாவில் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ராகேஷ் மிஸ்ரா கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு களை வழங்குகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT