Last Updated : 03 Mar, 2015 04:03 PM

 

Published : 03 Mar 2015 04:03 PM
Last Updated : 03 Mar 2015 04:03 PM

பெரிய கிரிக்கெட் தொடர்களுக்கான அணி இந்தியா: பிராட் ஹாக்

உலகக்கோப்பை போன்ற பெரிய கிரிக்கெட் தொடர்களுக்கான அணி இந்தியா, அதனால்தான் கோப்பையை இந்தியா வெல்லும், என்கிறார் பிராட் ஹாக்.

இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பை போட்டிகளில் எழுச்சிபெற்றதையடுத்து, கோப்பையை இந்திய அணி வெல்லும் என்று நம்பிக்கை ஏற்படுத்துவதாக ஆஸி. முன்னாள் பவுலர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது, "இந்திய அணியிடம் என்னை மிகவும் கவர்ந்திழுத்த அம்சம் ஃபீல்டிங். நான் விளையாடிய போது, எப்போதும் இந்திய பீல்டிங்குக்கு எதிராக கூடுதல் ரன்களை எடுக்கலாம் என்றே நாங்கள் நினைப்போம். குறிப்பாக பவுண்டரி அருகே பீல்டிங் இறுக்கமாக இருக்காது.

ஆனால், அன்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டிவில்லியர்ஸ், டேவிட் மில்லர் ஆகிய இருவரையும் ரன் அவுட் செய்தனர். இதனால் ஆட்டம் திருப்பு முனை கண்டது. தென்னாப்பிரிக்காவிடமிருந்து ஆட்டம் பறிக்கப்பட்டது.

பீல்டிங்கை திறம்படச் செய்வது இந்திய அணியின் பவுலர்கள், பேட்ஸ்மென்கள் மீதான சுமையைக் குறைக்கிறது. இதனால்தான் கூறுகிறேன், உலகக்கோப்பையை வெல்ல இந்திய அணிக்கே வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று.”

இவ்வாறு கூறினார் பிராட் ஹாக்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x