Published : 18 Dec 2014 05:28 PM
Last Updated : 18 Dec 2014 05:28 PM

பிரிஸ்பனில் 400 ரன்களுக்கு மேல் கொடுத்த ஆஸி. வெற்றி பெற்றதில்லை: புள்ளி விவரம் கூறுகிறது

பிரிஸ்பன் மைதானத்தில் எதிரணியினர் 400 ரன்களை முதல் இன்னிங்ஸில் எடுத்த சந்தர்ப்பங்களில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதில்லை.

பிரிஸ்பன் டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தில் உள்ள இந்த நிலையில் முதல் இன்னிங்ஸில் இந்த மைதானத்தில் 400 ரன்களுக்கு மேல் கொடுத்த டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதில்லை என்கிறது புள்ளி விவரங்கள்.

இதற்கு முன்னர் 3 முறை பிரிஸ்பன் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணி எதிரணியினருக்கு முதல் இன்னிங்ஸில் 400 ரன்களுக்கு மேல் விட்டுக் கொடுத்துள்ளது. இதில் ஒரு முறை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 1960ஆம் ஆண்டு பிரிஸ்பன் டெஸ்ட் ‘டை’ ஆனது.

இங்கிலாந்து அணி 1986ஆம் ஆண்டு பிரிஸ்பனில் 456 ரன்களை முதல் இன்னிங்ஸில் எடுத்த போது ஆஸ்திரேலியாவை இங்கிலாந்து வீழ்த்தியது. ஆஸ்திரேலியாவின் 2-வது இன்னிங்சில் ஆஃப் ஸ்பின்னர் ஜான் எம்ப்யூரே 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது ஆஸி. கேப்டன் ஆலன் பார்டர். இங்கிலாந்து கேப்டன் மைக் கேட்டிங்.

பிறகு 2012ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணி 450 ரன்களை முதல் இன்னிங்சில் எடுத்த போது டெஸ்ட் போட்டி டிரா ஆகியுள்ளது.

இம்முறை இந்தியா 408 ரன்களை எடுத்துள்ளது. ஆஸ்திரேலியா 221/4 என்று 2-ஆம் நாள் ஆட்ட முடிவில் உள்ளது.

ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதில்லை என்கிறது புள்ளி விவரங்கள். ஆனால், இம்முறை அது மாறலாம். அல்லது இந்தியா தீவிரமாக, ஆக்ரோஷமாக விளையாடினால் பிரிஸ்பன் மைதானத்தில் ஆஸ்திரேலியாவின் இந்தக் குறைபாட்டைத் தொடரச்செய்யலாம்.

நாளை நடைபெறும் 3ஆம் நாள் ஆட்டம் முடிவு என்ன என்பதை தெரியப்படுத்தும் என்று நம்பலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x