Last Updated : 27 Jan, 2015 09:49 AM

 

Published : 27 Jan 2015 09:49 AM
Last Updated : 27 Jan 2015 09:49 AM

தென்னாப்பிரிக்காவை வென்றது மேற்கிந்தியத்தீவுகள்

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 9 ஆண்டுகளுக்கு பிறகு வென் றுள்ளது மேற்கிந்தியத்தீவுகள்.

இரு அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் போட்டி, போர்ட் எலிசபெத்தில் நேற்று முன்தினம் நடந்தது. முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப் புக்கு 262 ரன்கள் சேர்த்தது. மேற்கிந்தியத்தீவுகள் 48.3 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 266 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ஒரு பக்கம் விக்கெட் சரிந்த நிலையில் 8-வது வீரராக களமிறங்கி ஆல்-ரவுண்டர் ரஸல் தனிநப ராக போராடி 40 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து அணிக்கு வெற்றி தேடித்தந்து கடைசி வரை களத்தில் இருந்தார்.

மேற்கிந்தியத்தீவுகள் அணி கடைசியாக 2006-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இருந்தது. அதன் பிறகு அந்த அணிக்கு எதிராக கடந்த 9 ஆண்டுகளில் தொடர்ந்து 15 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்து இருந்தது. ஒரு போட்டி டை ஆனது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x