Last Updated : 16 Sep, 2014 11:06 AM

 

Published : 16 Sep 2014 11:06 AM
Last Updated : 16 Sep 2014 11:06 AM

டேவிஸ் கோப்பை இந்தியா தோல்வி

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் உலக குரூப் பிளே ஆப் சுற்றில் இந்தியா 2-3 என்ற கணக்கில் செர்பியாவிடம் தோல்வி கண்டது. பெங்களூரில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் நடைபெற்ற ஒற்றையர் பிரிவில் சோம்தேவ், பாம்ப்ரி ஆகியோர் தோல்வி கண்டனர்.

பின்னர் நடைபெற்ற இரட்டையர் பிரிவில் இந்தி யாவின் பயஸ்-போபண்ணா ஜோடி வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற முதலாவது மாற்று ஒற்றையர் ஆட்டத்தில் சோம்தேவ் வெற்றி பெற்றதால், இரு அணிகளும் 2-2 என்ற கணக்கில் இருந்தன.

இதையடுத்து நேற்று முன்தினம் நடைபெற்ற வெற்றியைத் தீர்மானிப்பதற்கான 2-வது மாற்று ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் யூகி பாம்ப்ரியும், செர்பியாவின் கிராஜினோவிச்சும் மோதினர். ஆனால் மழை பெய்ததைத் தொடர்ந்து ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து இந்த ஆட்டம் நேற்று நடத்தப்பட்டது. அதில் கிராஜினோவிச் 6-3, 6-4, 6-4 என்ற நேர் செட்களில் பாம்ப்ரியை வீழ்த்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x