Last Updated : 30 Mar, 2015 08:23 PM

 

Published : 30 Mar 2015 08:23 PM
Last Updated : 30 Mar 2015 08:23 PM

கோலி-அனுஷ்கா சர்மா சொந்த விவகாரத்துக்கு மதிப்பளிக்க வேண்டும்: யுவராஜ் சிங்

கோலி-அனுஷ்கா சர்மா சொந்த வாழக்கைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று ரசிகர்களுக்கு யுவராஜ் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து யுவராஜ் தனது ட்விட்டர் பதிவில், “எங்களது வெற்றியிலும் தோல்வியிலும் ஆதரவு தெரிவிக்கும் அனைத்து உண்மையான ரசிகர்களுக்கும் நான் கேட்டுக் கொள்வது என்னவெனில் விராட் கோலி, அனுஷ்கா சர்மா சொந்த விவகாரங்களை மதிக்க வேண்டும் என்பதே.

ஆஸ்திரேலியா தொடரில் 5 சதங்கள் எடுத்த விராட் கோலி அவரது ரசிகர்களால் மதிக்கப்படுவதற்கு தகுதி உடையவரே.

இனி வரும் நாட்களில் அவர் நிச்சயம் நாட்டுக்காக சிறப்பாக தொடர்ந்து விளையாடுவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.”

என்று கூறியுள்ளார் யுவராஜ் சிங்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x