Last Updated : 26 Feb, 2017 11:27 AM

 

Published : 26 Feb 2017 11:27 AM
Last Updated : 26 Feb 2017 11:27 AM

ஒரு தோல்வியினால் தொடரையே இழந்து விட்டோம் என்று அர்த்தமல்ல: சச்சின் டெண்டுல்கர்

புனே டெஸ்ட் போட்டியில் சற்றும் எதிர்பாராதவிதமாக ஆஸ்திரேலிய அணியிடம் படுதோல்வியடைந்த இந்திய அணிக்கு ஆதரவாக சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி மாரத்தானை கொடி அசைத்து தொடங்கி வைத்த சச்சின் டெண்டுல்கர் கூறியபோது, “இந்தியா-ஆஸ்திரேலியா தொடர் நமக்குக் கடினமானதே. ஆனால் வெற்றி தோல்வி விளையாட்டில் சகஜம்.

முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்ததால் தொடரையே இழந்து விட்டோம் என்று அர்த்தமல்ல. இந்தத் தொடர் இன்னமும் திறந்தவெளியாகவே உள்ளது.

இந்திய அணியின் உணர்வு என்னவென்று தெரியும் என்பதால், நிச்சயம் மீண்டும் எழுச்சிபெறுவார்கள் என்று எனக்குத் தெரிகிறது. ஆஸ்திரேலியாவுக்கும் இது தெரியும், நாம் அவர்களை வீழ்த்தியிருந்தாலும் அந்த அணியும் நிச்சயம் மீண்டு எழும் என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதனால் இந்தியா இன்னும் சவாலாக எழுச்சிபெற்று மீண்டும் வெற்றிப்பாதைக்கு வரும் என்றே நான் நம்புகிறேன்.

எந்த ஒரு விளையாட்டிலும் நல்ல தருணங்கள், கடினமான தருணங்கள் இருக்கவே செய்யும், ஆனால் மீண்டும் நாம் எப்படி எழுந்து நின்று போட்டியிடுகிறோம் என்பதே முக்கியம், இதுதான் விளையாட்டை சுவாரசியமாக்குகிறது. இதற்காகத்தான் விளையாட்டு வீரர்கள் ஆடுகின்றனர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x