Published : 30 Mar 2015 05:45 PM
Last Updated : 30 Mar 2015 05:45 PM

இறுதிப் போட்டிக்குரிய மரியாதையை மெக்கல்லம் அளிக்கவில்லை: மேத்யூ ஹெய்டன்

உலகக் கோப்பை இறுதிப் போட்டி என்பதை நியூசிலாந்து கேப்டன் மெக்கல்லம் மதிக்கவில்லை என்று ஆஸி. முன்னாள் வீரர் ஹெய்டன் விமர்சித்துள்ளார்.

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மெக்கல்லம் முதல் ஓவரிலேயே ஸ்டார்க் பந்தில் பவுல்டு ஆகி வெளியேறினார். அவர் இறுதிப் போட்டியை மதிக்கவில்லை என்று மேத்யூ ஹெய்டன் விமர்சித்துள்ளார்.

இது குறித்து ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றில் மேத்யூ ஹெய்டன் எழுதிய பத்தியில் கூறியிருப்பதாவது: "மெக்கல்லம் இன்னும் கொஞ்சம் நிதானித்திருக்கலாம். 5 அல்லது 6 பந்துகளாக கூட அது இருக்கலாம்.

முதல் பந்து வீசப்படுவதற்கு முன்பு மெக்கல்லம் என்ற தாக்கம் குறித்து நிறைய பேசப்பட்டது.

அவர் டாஸ் போட வேண்டும், செய்தியாளர்களிடம் பேசியாக வேண்டும், உடனே கால்காப்பைக் கட்டிக் கொண்டு இறங்க வேண்டும், அணியினரிடத்தில் பேச வேண்டும்...இவையெல்லாம் சிரமானதுதான் என்பதை நான் மறுக்கவில்லை.

அவர் அப்படித்தான் ஆடுவார், அவரது அச்சமற்ற தைரியமான அதிரடி நியூசிலாந்து அணியை நல்ல நிலைக்கு உயர்த்தியது என்பதெல்லாம் சரி.

ஆனால், உலகக் கோப்பை இறுதிப் போட்டி ஒரு மிகப்பெரிய நிகழ்வு, மிகப்பெரிய மைதானம், மிகப்பெரிய அளவில் பார்வையாளர்கள், சூழ்நிலையின் தாக்கத்தை மெக்கல்லம் கொஞ்சம் பரிசீலித்திருக்கலாம்.

இறுதிப் போட்டி என்பதற்கு அவர் இன்னும் கொஞ்சம் மரியாதை அளித்திருக்க வேண்டும், அவர் இன்னும் கொஞ்சம் மதிப்பளித்திருக்க வேண்டும்.

பெரிய பவுண்டரிகள்.. இது நம் மனதில் எப்போதும் தாக்கம் செலுத்தும், மெக்கல்லம் இதனை ஏற்காமல் இருக்கலாம், ஆனால் இதுவரை அவர் அடித்த சிக்சர்கள் பவுண்டரிகளை விட இங்கு கூடுதல் முயற்சி தேவை.

சிறிய இலக்காக இருந்தாலும் ஆஸ்திரேலிய வீரர்க்ள் அதனை கவனத்துடன் ஆடி எடுத்தனர். ஒரு துல்லியமான விரட்டல். இப்படித்தான் இங்கு ஆட வேண்டும்" என்று அந்தப் பத்தியில் கூறியுள்ளார் மேத்யூ ஹெய்டன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x