Last Updated : 24 Mar, 2017 04:35 PM

 

Published : 24 Mar 2017 04:35 PM
Last Updated : 24 Mar 2017 04:35 PM

இந்தியாவில் தொடரை வெல்வது சிறந்த சாதனையாக அமையும்: ஆலன் பார்டர் விருப்பம்

இந்தியாவுக்கு எதிரான இந்தத் தொடரை ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் ஆஸ்திரேலியா வென்றால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் இது ஒரு சிறந்த சாதனையாக அமையும் என்று முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் தெரிவித்துள்ளார்.

தற்போது 1-1 என்ற நிலையில் தரம்சலா டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது, வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமான ஆட்டக்களம் என்பதோடு ஒரு சிறந்த டெஸ்ட் பிட்சாக அது செயல்படும் என்று பிட்ச் தயாரிப்பாளர் சுனில் சவுகான் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

“எந்த ஒரு அணிக்குமே இந்தியாவில் தொடரை வெல்வது ஒரு சிறந்த சாதனையாகவே அமையும். இதில் தொடரை வென்றால் ஆஸி. கிரிக்கெட்டிற்கு அது ஒரு ‘ஹோலி கிரெய்ல்’, மேலும் நம்புதற்கரிய வெற்றியாகவே அது அமையும்.

நாம் ஆஷஸ் பற்றி பேசியுள்ளோம், அதில் வெற்றி பெறுவது என்றால் என்னவென்பதைப் பற்றி பேசியுள்ளோம், சிறு சிறு காலக்கட்டங்கள் ஒரு தொடரில் நாம் வெல்ல முடியாமல் போகும், ஆனால் அவற்றை மீட்டு வெற்றி பெறுவது அருமையானதுதான்.

முன்பாக இது உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் ஆஸ்திரேலிய அணி சாதித்ததுதான். ஆனால் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற முடியாத ஒரு இடமாக இந்தியா உள்ளது.

ஆனால் இந்தத் தொடரில் கடைசி டெஸ்ட் போட்டி மீதமுள்ள நிலையில் இரு அணிகளும் 1-1 என்ற நிலையில் இருப்பது உண்மையில் ஆச்சரியத்தை அளிக்கிறது.

3-வது டெஸ்ட் போட்டியில் கடைசி நாளில் ஆட்டமிழக்காமல் டிரா செய்தது மிகப்பெரிய சாதனை. இது ஒன்றே இந்த அணி குழுவாக எழுச்சியுற்றுள்ளதற்கு அடையாளமாக திகழ்கிறது.

1-1 என்று தொடர் டிரா ஆனால் கூட நான் உட்பட நிபுணர்கள் இந்தத் தொடருக்கு முன்பாக கூறிய கருத்துகளுக்கு பெரிய அடியாக இருக்கும். ஆஸ்திரேலியா தோற்றுவிடும் என்று எழுதியவர்களில் நானும் ஒருவன். நான் வரலாற்றுப் பூர்வமாக என் கருத்தை எழுதினேன் அவ்வளவே” என்றார் ஆலன் பார்டர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x