Published : 28 Aug 2014 11:41 AM
Last Updated : 28 Aug 2014 11:41 AM

இந்தியா வருகிறார் போல்ட்

உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரரான ஜமைக்காவின் உசேன் போல்ட் அடுத்த மாதம் இந்தியா வருகிறார். முதல் முறையாக இந்தியாவுக்கு அவர் வருவது ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்பதற்கு அல்ல; யுவராஜ் சிங்குடன் இணைந்து கிரிக்கெட் விளையாடுவதற்காக!

உசேன் போல்டும், யுவராஜ் சிங்கும் விளையாட்டு உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனமான பூமாவின் தூதுவர்களாக உள்ளனர். அவர்கள் இருவரிடையே செப்டம்பர் 2-ம் தேதி நடைபெறவுள்ள இந்த போட்டிக்கு “போல்ட் மற்றும் யுவி- இரு ஜாம்பவான்களிடையிலான மோதல்” என பெயரிடப்பட்டுள்ளது என்று பூமா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டி செப்டம்பர் 2-ம் தேதி நடைபெறுகிறது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x