Last Updated : 19 Dec, 2014 04:14 PM

 

Published : 19 Dec 2014 04:14 PM
Last Updated : 19 Dec 2014 04:14 PM

இந்திய அணியினரின் வாய்ப்பேச்சுக்கு ஜான்சன் பதிலடி கொடுத்தார்: ஸ்டீவ் ஸ்மித்

மிட்செல் ஜான்சன் களமிறங்கிய போது இந்திய வீரர்கள் சிலர் அவர் மீது வார்த்தைகளால் பாய்ந்தனர், அது அவருக்கு தூண்டுகோலாக அமைந்தது.

பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டத்தில் இந்தியப் பந்து வீச்சை மிட்செல் ஜான்சன் புரட்டி எடுத்ததற்குக் காரணம் அவரை இந்திய வீரர்கள் ஸ்லெட்ஜ் செய்து தூண்டிவிட்டதே என்று ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

247/6 என்ற நிலையில் இந்தியப் பந்து வீச்சு ஆக்ரோஷமாகக் காணப்பட்டது. இந்நிலையில் ஜான்சன் களமிறங்க அவர் இறங்கியவுடனேயே இந்திய பீல்டர்களின் ஸ்லெட்ஜிங் தொடங்கி விட்டது.

குறிப்பாக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரும் இசாந்த் சர்மா தனது பார்வை, செய்கை மூலமாகவும் ஜான்சனின் கவனத்தை சிதறடிக்க முயன்றனர்.

ஆனால் அது இந்திய அணிக்கு எதிராகப் போய் முடிந்தது. அப்போது மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த கேப்டன் ஸ்மித் இது பற்றி கூறுகையில், “ஜான்சன் இறங்கி முதல் பந்திலிருந்தே ஆக்ரோஷமாக ஆடினார்.

இந்திய அணியினர் அவர் மீது ஆக்ரோஷம் காட்டினர். ஏகப்பட்ட பவுன்சர்களை வீசினர். சிலபல கேலி வார்த்தைகளும் ஜான்சன் காதில் கேட்கும்படியாகப் பேசப்பட்டது.

மிட்செலும் ரோஹித் சர்மாவும் ஒருவரையொருவர் பரஸ்பரம் கேலிப் பேச்சில் ஈடுபட்டனர். ஆனால் ஜான்சன் இந்தியப் பந்து வீச்சை பதம் பார்த்தார். நேர்மையாகக் கூறவேண்டுமெனில் ஜான்சனின் பேட்டிங் முன்னால் இந்திய பவுலர்களுக்கு விடை இல்லாமல் போனது.

டெய்ல் எண்டர்கள் இவ்வாறாக பேட்டிங் செய்யும் போது எதிரணியினருக்கு அது ஒரு துர்சொப்பனமாகவே இருக்கும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x