Published : 22 Jun 2017 05:41 PM
Last Updated : 22 Jun 2017 05:41 PM

அனில் கும்ப்ளே மீதான தன் கசப்புணர்வை வெளிப்படுத்திய கோலியின் செயல்

கும்ப்ளே பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதை வரவேற்று அப்போது வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவை விராட் கோலி நீக்கியுள்ளார்.

விராட் கோலிக்கும் அனில் கும்ப்ளேவுக்குமான இடைவெளி வெறும் கருத்து வேறுபாடல்ல, பெரிய கசப்புணர்வு என்பதை வெளிப்படுத்தும் விதமாக விராட் கோலியின் இந்தச் செயல் சுட்டிக்காட்டியுள்ளது.

அனில் கும்ப்ளே இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பிறகு ஜூன் 23, 2016-ல் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில்,

“அனில் கும்ப்ளே சாருக்கு இதயம் கனிந்த வரவேற்பு. எங்களுடனான உங்களது பணியை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம். உங்களது பணியுடன் இந்திய கிரிக்கெட்டுக்கு நிறைய பெரிய விஷயங்கள் காத்திருக்கிறது” என்று பதிவிட்டிருந்தார். ஆனால் தற்போது தன் அந்தப் பதிவை நீக்கியுள்ளார் விராட் கோலி

அனில் கும்ப்ளே ராஜினாமா செய்த பிறகு வெளியிட்ட பதிவில், விராட் கோலிக்கு தான் பயிற்சியாளராக நீடிப்பதில் விருப்பமில்லை என்பதால் ராஜினாமா செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறியதையடுத்து இருவருக்குமிடையேயான வேறுபாடுகள் வெட்ட வெளிச்சமானது.

இந்நிலையில், இது வெறும் கருத்து வேறுபாடல்ல அதையும் தாண்டிய ஆழமான கசப்புணர்வு என்பது தற்போது விராட் கோலி, கும்ப்ளேயை வரவேற்று பதிவிட்டிருந்த பழைய ட்வீட்டை நீக்கியதிலிருந்து தெரிய வந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x