Published : 09 Jul 2018 08:47 AM
Last Updated : 09 Jul 2018 08:47 AM
ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் கால் இறுதியில் பிரேசில் அணி 2-1 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணியிடம் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. முன்னதாக நாக் அவுட் சுற்றில் மெக்சிகோ அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது பிரேசில் அணியின் நட்சத்திர வீரரான நெய்மர், எதிரணி வீரர் காலை தட்டிவிட்டதாகக்கூறி சில அடி தூரத்துக்கு டைவ் செய்தபடி உருண்டு சென்று விழுந்தார்.
இதுதொடர்பாக ஆட்டம் முடிவடைந்ததும் மெக்சிகோ அணியின் பயிற்சியாளர் கடும் விமர்சனம் செய்தார். நெய்மர் வேண்டுமென்றே நடித்து நேரத்தை கடத்தியதால் தங்கள் அணியின் ஆட்டத்திறன் பாதிக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார். சுவிட்சர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்திலும் நெய்மர் பலமுறை பவுல் செய்யப்பட்டு கீழே விழுந்தார். இந்நிலையில் நெய்மர் களத்தில் விழும் காட்சிகளை கேலி செய்து ரசிகர்கள் டுவிட்டரில் வீடியோக்களை பதிவிட்டுள்ளனர்
சிறுவர்கள் முதல் வளர்ப்பு நாய் வரை நெய்மர் சேலஞ்சை செய்து வருகிறார்கள். இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அதில் இந்தியாவை சேர்ந்த வயதான பெண் ஒருவர், வீட்டு வேலைகளை செய்யும் போது லேசாக அடிப்பட்டதும் நெய்மர் போன்று கீழே சுருண்டு விழும் காட்சிகள் வைரலாகி வருகின்றன. சிறுவர்களும் தங்களது பங்குக்கு நெய்மரை கேலி செய்துள்ளனர். இதுபோதாதென்று ஒரு வீடியோவில் பூனை ஒன்று நாயை பார்த்து சீறுகிறது. உடனே நாய் அடிபட்டது போன்று கீழே விழுந்து உருள்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT