Published : 15 May 2018 02:12 PM
Last Updated : 15 May 2018 02:12 PM

மும்பை இந்தியன்ஸை வீட்டுக்கு அனுப்புவோம்: அஸ்வின் நம்பிக்கை

ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக படுமோசமாக ஆடி தோல்வி தழுவிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் இன்னும் பிளே ஆஃப் தகுதி வாய்ப்பை இழக்காவிட்டாலும் இன்னும் குறைந்தது ஒரு போட்டியிலாவது வென்று 14 புள்ளிகளுடன் மற்ற போட்டிகளின் முடிவை நம்பியிருக்க வேண்டும், அல்லது அடுத்த 2 போட்டிகளிலும் வென்று 16 புள்ளிகளுடன் தகுதி பெற வேண்டும்.

இந்நிலையில் அணியின் உத்வேகத்தை அழிக்கும் தோல்வியை ஆர்சிபி அணிக்கு எதிராக நேற்று கிங்ஸ் லெவன் பெற்றது. 88 ரன்களுக்குச் சுருண்டு பிறகு கோலி, பார்த்திவின் பவுண்டரி மழையில் ஒரு விக்கெட்டைக் கூட வீழ்த்த முடியாமல் தோல்வி தழுவியது.

இந்நிலையில் தோல்வி அணியான கிங்ஸ் லெவனின் கேப்டன் அஸ்வின் கூறியதாவது:

கடும் ஏமாற்றமளிக்கிறது. பவுலர்கள்தான் புள்ளிகளை எங்களுக்குப் பெற்றுத் தந்தனர். எங்களை நாங்களே மீட்டெடுத்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

நெட் ரன் ரேட்டில் எங்களுக்கு கவனம் தேவைப்படுகிறது. ஆனால் மீதமுள்ள போட்டிகளில் வென்று முன்னேறுவதே பாசிட்டிவ் அணுகுமுறை.

வீரர்கள் தங்கள் என்ன நினைத்தனரோ அந்த ரன் எண்ணிக்கையை எடுக்க முடியவில்லை. 20 ஓவர் ஆடவில்லை, 3,4 விக்கெட்டுகளை விறுவிறுவென இழந்தோம். வெற்றி மீண்டும் எங்கள் பக்கம் திருப்ப வேண்டும்.

மும்பையை வீட்டுக்கு அனுப்ப எங்களால் ஆன முயற்சிகளை மேற்கொள்வோம். புனேயில் என்ன ஆகிறது என்று பார்ப்போம்.

பந்துவீச்சு ஓரளவுக்கு நன்றாகவே உள்ளது, நிறைய சர்வதேச அனுபவ வீரர்கள் எங்களிடம் உள்ளனர், இன்று பேட்டிங்கில் சரியாக காட்டவில்லை அவ்வளவுதான்.

இவ்வாறு கூறினார் அஸ்வின்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x