Published : 29 Apr 2018 10:01 AM
Last Updated : 29 Apr 2018 10:01 AM

இப்படிப்பட்ட தோல்விகள் நம்மை அடக்கமானவர்களாக்கும்: தோனி கூல்

ஒரு சேஞ்சுக்கு மும்பை வெற்றி பெற ஒரு சேஞ்சுக்கு நேற்று புனேயில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியடைந்தது.

10 ஓவர்களுக்குப் பிறகு ஒரு 3-4 ஓவர்களை ரெய்னா, தோனி சரியாகக் கையாளவில்லை, இதனால் 15-20 ரன்கள் குறைவாக எடுத்தது, பிறகு பந்துவீச்சில் சாஹர் காயத்தில் பாதியில் வெளியேற, சூரியகுமார் யாதவ், ரோஹித் சர்மா ஆகியோர் தோனியின் களவியூகத்தை பகடி செய்யுமாறு ஆடியதில் சென்னைக்குத் தோல்வி, மும்பைக்கு வெற்றி.

இதனையடுத்து ஆட்டம் முடிந்த பிறகு தோனி கூறும்போது, “இத்தகைய தோல்விகள் நம்மை அடக்கமானவர்களாக்கும். வெற்றி பெற்றுக் கொண்டேயிருந்தால் எந்தத்துறையில் நாம் கடினமாக உழைக்க வேண்டுமென்பது தெரியாமல் போய்விடும்.

இது நல்ல ஆட்டம். இத்தகைய சூழ்நிலைகளில் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்தப் போட்டி எங்களுக்குக் கற்றுக் கொடுத்துள்ளது. அதாவது இன்னும் 20 ரன்களை அதிகம் எடுத்திருக்க வேண்டுமா போன்றவற்றை நாங்கள் யோசிக்க வேண்டும். ஆனாலும் இந்தத் தொடரில் இன்னும் ஆரம்பக்கட்டத்தில்தான் இருக்கிறோம்.

தவறு எங்கு நடந்தது என்பதை உணர வேண்டும். எப்போதும் சில தனிவீரர்களின் தனிப்பட்ட திறன்களை நம்பியே இருக்கிறோம். நாங்கல் 10-15 ரன்கள் குறைவாக எடுத்தோம். மும்பை இந்தியன்ஸ் மிடில் ஓவர்களை சிறப்பாக வீசினர். பேக் ஆஃப் லெந்தில் வீசினர். ஆகவே பந்துகள் மட்டைக்கு வரவில்லை.

அதே போல் வேகப்பந்து வீச்சாளர்கள் நல்ல வேகம் வீசினால் பேட்ஸ்மென்களை பின்னால் சென்று ஆட வைக்க முடியும். கிராஸ் பேட் ஷாட்கள் இந்தப் பிட்சில் எளிதல்ல. அவர்கள் ஸ்பின்னர்கள் நன்றாக வீசினர், எங்கள் பவுலர்கள் வீச முடிவு செய்த பந்துகள் இன்னும் கொஞ்சம் நல்ல பந்துகளாக அமைந்திருக்கலாம்” என்றார் தோனி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x