Published : 27 Apr 2018 11:04 AM
Last Updated : 27 Apr 2018 11:04 AM

நல்ல பிட்ச் அல்ல.. பந்துகள் நின்று வந்தன: தோல்விக்குப் பிறகு கேப்டன் அஸ்வின்

சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக குறைந்த வெற்றி இலக்கான 133 ரன்களை எடுக்க முடியாமல் சொதப்பலான பேட்டிங், அருமையான பவுலிங் என்ற இரண்டன் கூட்டணியில் வீழ்ந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் கேப்டன் அஸ்வின் தோல்வியினால் கடும் ஏமாற்றமடைந்தார்.

132 ரன்கள் இலக்கை எதிர்த்து டெஸ்ட் போட்டி போல் நிதானமாக ஆடியிருந்தால் போதும் வெற்றி பெற்றிருக்கலாம், ஆனால் தேவையில்லாமல் பதற்றமடைந்து பாசிட்டிவ் ஆக ஆடுகிறேன் பேர்வழி என்று கையில் கொடுத்தனர் கிங்ஸ் லெவன் வீரர்கள்.

முதலில் அங்கிட் ராஜ்புத் 14 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்ற பிட்சில் கொஞ்சம் புற்கள் விட்டுவைக்கப்பட்டிருந்ததுதான் காரணம், ஆனால் அஸ்வினோ இது பெரிய பிட்ச் அல்ல என்கிறார்.

அதிர்ச்சித் தோல்வி ஏற்பட்டது. இதனையடுத்து ஆட்டம் முடிந்து கிங்ஸ் லெவன் கேப்டன் அஸ்வின் கூறியதாவது:

இருந்த நிலைமைக்கு இந்தப் போட்டியில் வென்றிருக்க வேண்டும். ஏமாற்றமாக இருக்கிறது. இது நல்ல பிட்ச் அல்ல. பந்துகள் நின்று வந்தன.

இந்த வடிவத்தில் இப்படியெல்லாம் நடக்கும். நாங்கள் நன்றாக ஆடிவரும் போது இப்படி ஏற்பட்டுள்ளது, ஆனால் இப்படி நடப்பது சகஜம்தான்.

பீல்டிங்கிலும் நாங்கள் சொதப்பினோம், இதனால் 20-25 ரன்கள் கூடுதலானது. விளக்கொளியில் கேட்ச்கள் கடினமே, ஆனால் சாக்குப்போக்கு கிடையாது. தொழில் நேர்த்தியான கிரிக்கெட் வீரர்களாக நாங்கள் கடினமாக உழைத்து மீண்டும் வெற்றிப்பாதைக்குத் திரும்ப வேண்டும்

7 நாட்கள் ஆஃப். தோல்வி ஒருவிதத்தில் நல்லதுதான். ரஷீத் கான் சிறப்பாக வீசினார். இத்தகைய பிட்சில் அவரிடமிருந்து நாம் இந்தப் பந்து வீச்சை எதிர்பார்க்க வேண்டும். அவர் பயனுள்ள ஒரு வீரர்.

இவ்வாறு கூறினார் அஸ்வின்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x